Tuesday, November 1, 2011

உனக்கான சில கிறுக்கல்கள்


தினமும் உன் முகத்தில்
விழித்தால் தான்
அன்றைய தினம்
நன்றாய் இருக்கிறதாம்
உன் வீட்டுக்
கண்ணாடிக்குகூட
**--**--**--**--**--**
நீ தூக்கி எறியும்
குப்பைகூட அழுகிறது
இன்னும் சிறிது நேரம்
உன் கரம் பற்றி
அதன் சாபம்
நீக்கிக் கொள்ளலாம் என்று.

**--**--**--**--**--**
நீ பேசும்
வார்த்தைகளை
எப்படி கோர்த்தாலும்
கவிதை பூவாகவே
தெரிகிறது எனக்கு

**--**--**--**--**--**

நீ பேசா
வார்த்தைகள்
மௌனத்தை விட
சத்தமாய்
கேட்கிறது எனக்கு

**--**--**--**--**--**

உன் பார்வையின்
அர்த்தம் புரிந்து
சொன்னதையும் செய்கிறேன்
சொல்லாததையும் செய்கிறேன்
எங்கு நோக்கு வர்மம் கற்றாய்?

**--**--**--**--**--**

உனக்கான கவிதைகளை
எழுத ஆரம்பித்த பிறகு
நேரம் போவதும்
தெரியவில்லை
தூங்க மறந்ததும்
நினைவில்லில்லை

**--**--**--**--**--**

தினமும் இரவு ஒரு மணிக்கு
நான் தூங்கமறந்ததை
நினைவுபடுத்துவாய்
இன்று நீ
நினைவுபடுத்த மறந்ததால்
இன்னும்
ஒரு மணியாகவில்லை எனக்கு
சேவல் கூவிய பிறகும்

**--**--**--**--**--**

நீ பறிக்கத் தவறிய
பூக்களை
ஒருமுறையாவது
பார்த்துவிட்டு போ
அதன்
பிறவி பயனையாவது
அடையட்டும்

**--**--**--**--**--**

No comments:

Post a Comment